பெரம்பூர்: வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் இறந்து விட்டதால், மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்தார். நேற்று அனைவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது வள்ளியம்மாள் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வள்ளியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், வள்ளியம்மாவின் பேரன் சுரேஷ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.