சென்னை: தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு சுவர் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆற்றினுள்ளேயே இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளத் தடுப்பு, குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் செலவழிக்கப்படுவது இந்த லட்சணத்தில்தானா, பணிகள் நடக்கிறதா அல்லது பணிகள் நடப்பதாகக் கணக்குக் காட்டப்படுகிறதா, அனைத்து மாவட்ட கழகங்களும் இதனைக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.