சென்னை: ரயில்வே பாதுகாப்புப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சில இணையதளங்களில் ‘ஆர்பிஎப்’ல் 19,952 கான்ஸ்டபிள்களை தேர்வு செய்வதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆர்பிஎப், ரயில்வே அமைச்சகம் தனது அலுவலக இணையதளத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. பத்திரிகை, டிவியிலும் தெரிவிக்கவில்லை. ஏதாவது விளம்பரம் இருந்தால், அது ஆர்பிஎப், ரயில்வே அமைச்சகத்தின் இணையதள முகவரியில் மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே இதை நம்ப வேண்டாம். பொய்யான செய்திகளை நம்பி பாதிக்கப்பட்டால், அதற்கு ஆர்பிஎப், ரயில்வே பொறுப்பேற்காது.