சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான சேலம், மதுரை கோட்டங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை ஏலம் விடுவதற்கு போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.