ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங், ஸ்ரீநகரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கு 250க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்தில் 3 தீவிரவாதிகள் மட்டுமே ஊடுருவி இருக்கின்றனர். அதில், ஒருவர் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி. டிரால் பகுதியில் அவன் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தாண்டு காஷ்மீரில் நடந்த 10 தேடுதல் வேட்டைகளும், ஜம்முவில் நடந்த 2 தேடுதல் வேட்டைகளும் வெற்றிகரமாக முடிந்தன. இதில், 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.