பெர்த்: மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவில் இலங்கை அணியுடன் மோதிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. வாகா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் குவித்தது. கேப்டன் ஜெயாங்கனி அதிகபட்சமாக 41 ரன் விளாசினார். ஹாசினி 20, சஞ்சீவனி 15, மாதவி 27* ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் ஹேலி ஜென்சன் 4 ஓவரில் 16 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வென்றது.