மாவட்ட த்ரோபால்: வேலம்மாள் சாம்பியன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான 4வது த்ரோபால் போட்டி மீஞ்சூரில் உள்ள  தனியார் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் மாணவ, மாணவிகள் பிரிவில் தலா 25 அணிகள் பங்கேற்றன.மாணவர்கள் இறுதிப் போட்டியில் வேலம்மாள் வித்யாஸ்ரமம் அணி 15-7, 15-12 என்ற நேர் செட்களில்  மீஞ்சூர்  டிவிஎஸ்ஆர் பள்ளியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அதுபோல், மாணவிகள் பிரிவில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி 15-8, 15-6 என்ற நேர் செட்

களில் ஸ்பார்டன் மெட்ரிக் பள்ளியை வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.வெற்றிபெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு எறிபந்து சங்கத்தின் தலைவர் பாலவிநாயகம், டிவிஎஸ்ஆர் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ராமமூர்த்தி, கவுன்சிலர் வசுமதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Related Stories: