புதுச்சேரி: மக்களுக்கும் எதும் செய்ய முடியவில்லை. கட்சிக்கும் எதுவும் செய்ய முடியவில்லை.எதற்கு இந்த ஆட்சி என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வருத்ததுடன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கும் முகாமை புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நேற்று துவங்கியது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, இலவச அரிசி விவகாரத்தை சுட்டிகாட்டி, ’இன்று ஒரு கறுப்பு தினம். மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் தருவதில்லை. நீதிமன்றமாவது நமக்கு உதவும் என பார்த்தும் ஒத்துழைப்பு இல்லை. இந்த ஆட்சி இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்’ என கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை வெளியே அனுப்பிய முதல்வர் கண் கலங்கி குரல் தழுதழுத்து, ’மக்களுக்கும் எதும் செய்ய முடியவில்லை. கட்சிக்கும் எதுவும் செய்ய முடியவில்லை.எதற்கு இந்த ஆட்சி’ என பேசினார்.இதனால் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதன் மூலம் முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.