சென்னை: பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி - யை நடைமுறைப்படுத்த கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணியில் திருமாவளவன் எம்.பி. பேசினார். சிஏஏ, என்.பி.ஆரை ஆதரிப்பது பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு செய்யும் துரோகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிறப்பு விபரங்களை கேட்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதலவர் எழுதிய கடிதம் ஏமாற்று வேலை எனவும் அவர் தெரிவித்தார்.