சென்னை: பாதுகாப்பு ஒத்திகையில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிரவாத தாக்குதல் நடந்தால் தடுப்பது எப்படி என ஒத்திகை நடந்தது. தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுபவர்கள் முஸ்லிம்களை போல வேடமிட்டு பயங்கவாதிகளாக அடையாளம் காட்டப்பட்டனர் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.