தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனுதாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனுதாக்கல் செய்துள்ளார். ரசிகர்கள் அதிகளவில் கூடி சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு தேவை என அவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் ரஜினி கூறியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் விசாரணைக்காக ரஜினிக்கு ஆணையம் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது.

Related Stories: