சென்னை: சென்னையில் போலீசாரின் தடையை மீறி பள்ளி மாணவர்கள் பேருந்துநாள் கொண்டாடியதுடன், பேருந்து மேற்கூரையில் ஏறி ஆட்டம்போட்டது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பேருந்து நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் பயணிகளையும், பொதுமக்களையும் துன்பத்திற்கு ஆளாக்கும் நிலை அதிகரித்து வந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் ரூட்டுதல என்ற பெயரில் அவ்வப்போது பஸ்டே கொண்டாடுகின்றனர். போலீசாரின் எச்சரிக்கையையும், அறிவுறுத்தலையும் மீறி சாகசம் செய்ய நினைத்து சங்கடத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களும் உண்டு. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களும் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடி உள்ளனர்.