கடலூர்: வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் குடிநீர் தேவைக்காக சென்னைக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 58 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர் திறப்பு 74 கனஅடியாக உயர்ந்துள்ளது. சென்னையின் குடிநீர் தேவைகளில் முக்கியமான ஒன்றாக வீராணம் ஏரி உள்ளது.