×

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில், பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேபோல் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அப்போது அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : militants ,Security forces ,Kashmir ,Anantnag ,Jammu ,area , Two militants,shot dead,security forces , Anantnag, Jammu and Kashmir
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு