சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் நேற்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில் புட்ரேக் ஐஆர்டிசி பாஸ்ட்புட் யூனிட் கிட்சன் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊழியர்கள் இட்லி, வடை போன்றவற்றை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, வடை சுடும் எண்ணெய் மீது தண்ணீர் பட்டு குபீரென தீப்பிடித்தது. அருகில் இருந்த பொருட்கள் மீது தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு கருவியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் ஊழியர்கள் தவித்தனர்.