தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, சாத்துமா நகரை சேர்ந்தவர் யுகேந்திரா (20). கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று ராயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு, காசிமேடு எஸ்.என்.செட்டி தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள், யுகேந்திராவை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், 2 சவரன் செயினை பறித்து சென்றனர்.