×

வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கைது

பெரம்பூர்: புளியந்தோப்பில் குடிபோதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.  புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் 6வது தெருவில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஒரு குடும்பல் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. விசாரணையில், வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சேர்ந்த ரவுடி சாக்ரடீஸ் (19) மற்றும் அவரது நண்பர்களான சூர்யா, விஜய், அஜித் உள்ளிட்ட 8 பேர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அந்த பகுதியில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. இதில்  முக்கிய குற்றவாளியான சாக்ரடீஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Rowdy , Vehicles, Rowdy arrested
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது