துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி சிவராத்திரி வாழ்த்து

புதுடெல்லி: மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவும், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மகா சிவராத்திரி நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் டிவிட்டரில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, ‘இந்த மங்களகரமான நன்னாளில் உலகம் முழுவதும் இருக்கும் பக்திமிக்க சமூகத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நமக்குள்ள குறைகளில் இருந்து வெளியே வருவதற்கான ஞானத்தையும், தைரியத்தையும் வழங்கும்படி சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,’ என்றார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சிவபெருமான் என்று  அழைக்கப்படும் பாபா போலேநாத் ஆசிர்வாதமானது நாட்டில் உள்ள அனைத்து மக்களின்  வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை  கொண்டு வரும் என்று நம்புகிறேன,’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: