பெங்களூரு: பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டஅமுல்யா மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவரின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று கோரி கன்னட மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள், பெங்களூரு டவுன்ஹால் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது, திடீரென்று அந்த இடத்திற்கு வந்தபெண் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பதாகையை எடுத்து காட்டினார். அதில், ‘விடுதலை கொடு, விடுதலை கொடு காஷ்மீரி, இஸ்லாமியர், தலித், பகுஜன், திருநங்கைகளுக்கு விடுதலை கொடு’ என்று கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.