திருவனந்தபுரம்: கேரளாவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இசை ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம், கோட்டயம் அருகே வைக்கம் ஆறாட்டுக்குளங்கரை பகுதியை சேர்ந்தவர் நரேந்திர பாபு (51). ஏற்றுமானூர் அரசு உறைவிட பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி இவர், தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பள்ளியில் படிக்கும் 14 மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோட்டயம் சிறையில் அடைத்தனர். 45 நாள் சிறைவாசத்துக்கு பிறகு சமீபத்தில் வெளியே வந்த அவர், மனமுடைந்து காணப்பட்டார்.