மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கூறைநாடு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரயிலடியிலிருந்து ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் சென்றனர். அவர்களை போக்குவரத்து போலீசார் நிறுத்தும்படி கூறினர். ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை. ஆத்திரமடைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மூர்த்தி, தன் கையில் வைத்திருந்த லத்தியால் பைக்கின் பின்னால் உட்காரந்திருந்த சுரேந்தர் (24) முதுகில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய பைக் கீழே சாய்ந்து விழுந்தது. இதில் பைக்கை ஓட்டிய கணேஷ்குமார் (22), நடுவில் உட்கார்ந்திருந்த விக்னேஷ் (23)க்கும் காயம் ஏற்பட்டது.