×

திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் 25 பேர் படுகாயம்

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேட்டு இருங்களூரில் நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சுமார் 750 காளைகள் பங்கேற்றன. 300 வீரர்கள் சீருடையுடன் களமிறங்கினர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் மாடு முட்டி 25 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 5 பேர் மட்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Jallikkad ,Trichy Trichy ,Jallikattu , 25 injured , Jallikattu , Trichy
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை