×

டிக்-டாக்கில் பழகியவருடன் கள்ளத்தொடர்பு: மனைவியை விவாகரத்து செய்ய கணவர் முடிவு

வேலூர்: டிக், டாக்கில் பழகியவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட மனைவியை விவாகரத்து செய்ய கணவர் முடிவு செய்துள்ளார். வேலூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 2குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், டிக்டாக் செயலியில் பாடல், வசனம், நடனம் உள்ளிட்டவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவரது டிக், டாக் பதிவுகளை, வேலூரில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்டத்தை சேர்ந்த திருமணமான 32 வயது வாலிபர், லைக், கமாண்ட் கொடுத்து பின் தொடர்ந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு எஸ்எம்எஸ் அனுப்பி பழகியுள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இளம்பெண், குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்துள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரது செல்போனை பார்த்தபோது, டிக், டாக் செயலிக்கு அடிமையாகி, மற்றொரு வாலிபருடன் பழகியது தெரியவந்தது. இதையடுத்து மனைவிக்கு, கணவர் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அவர் இதை கேட்கவில்லையாம். இதனால் அவரது கணவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், கள்ளக்காதலில் ஈடுபட்ட நபரின், தனியார் நிறுவனத்தில் புகார் தெரிவித்து, அவரை வேலையை விட்டு நிறுத்தி, அறிவுரை கூறி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இளம்பெண்ணுக்கும், போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இருப்பினும், இளம்பெண்ணின் கணவர், என் மனைவி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளேன் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dick-Talk: Husband , tik tok
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...