கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ஒருதலை காதலால் திருமணமான பெண் மீது, பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெய்வேலி பகுதியை சேர்ந்த சலோமி என்ற பெண் வடலூரில் உள்ள யூத் பாயிண்ட் எனும் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில், தினமும் பேருந்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான அவர், பேருந்தில் வேலைக்கு வரும் சமயத்தில் தனியார் பேருந்து நடத்துநரான சுந்தரமூர்த்தி என்பவருடன், நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.