×

கடலூரில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ஒருதலை காதலால் திருமணமான பெண் மீது, பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்ட பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெய்வேலி பகுதியை சேர்ந்த சலோமி என்ற பெண் வடலூரில் உள்ள யூத் பாயிண்ட் எனும் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  இந்நிலையில், தினமும் பேருந்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான அவர், பேருந்தில் வேலைக்கு வரும் சமயத்தில் தனியார் பேருந்து நடத்துநரான சுந்தரமூர்த்தி என்பவருடன், நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.  

அதனை தவறாக புரிந்து கொண்ட சுந்தரமூர்த்தி சலோமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சலோமி, சுந்தரமூர்த்தியுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி இன்று சலோமி வேலை செய்யும் நிறுவனத்துக்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெண் மீது தீவைத்து கொல்ல முயன்ற சுந்தரமூர்த்தியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cuddalore, woman, petrol, youth, arrested
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை