அருப்புக்கோட்டை பள்ளி குண்டு எறிதல் போட்டியில் சாதனை

அருப்புக்கோட்டை: தென்னிந்திய அளவிலான குண்டு எறிதல் போட்டில் அருப்புக்கோட்டை மாணவன் சாதனை படைத்தார். தென்னிந்திய அளவிலான குண்டு எறிதல் போட்டி சென்னை வேலம்மாள் இண்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் நடந்தது.

இதில் அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் நவீன் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பள்ளி செயலாளர் சரவணன், தாளாளர் பார்த்திபன், பள்ளி முதல்வர் ராஜசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: