சென்னை: ஹாலிவுட் படங்கள் போல் படமெடுத்தால் மட்டும் போதாது. அதற்கு இணையாக வசதிகளும் செய்து தர வேண்டும் என்று டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிப்ரவரி 19-ம் தேதி இரவு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். ஷங்கர், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினார்கள். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதனிடையே இறந்தவர்களுக்கு நேற்று (பிப்ரவரி 20) கமல் அஞ்சலி செலுத்துவிட்டு, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். மேலும், லைகா நிறுவனமும் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. தற்போது பெப்சி அமைப்பில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.