வடலூர்: வடலூரில் திருமணமான பெண் மீது ஒருதலை காதலால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார். பலத்த காயமடைந்த சலோமி(21) உயிருக்கு ஆபத்தான நிலையில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையி்ல், சலோமி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தியை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.