திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

மதுரை: மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசை விமர்சித்து பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், முகாந்திரம் ஏதும் இன்றி அரசியல் காழ்ப்புணர்வுடன் தம் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிடக் கோரிக்கை வைத்துள்ளார்.

அவதூறு வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரிக்கை வைத்தார். இதனிடையே சோழிங்கநல்லூரில் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து பேசினார். இருவரைப் பற்றியும் அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திண்டுக்கல் நீதிமன்றத்தில், முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் வந்தது. அப்போது இந்த வழக்கை எம்.பி.எல்.ஏ.க்கள் விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: