கர்நாடகா: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை தேசத்துரோக வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை 3 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் ஏ.ஐ.எம்.ஐ.எம். இஸ்லாமிய கட்சி எம்.பி ஓவைசியின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மேடையில் முழக்கமிட்ட இளம்பெண் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, மஜத மாமன்ற உறுப்பினர் இம்ரான் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் ஓவைசி பேசும் போது கூட்டத்தின் மேடையில் ஏறிய அமுல்யா என்ற இளம்பெண் பாகிஸ்தான் சிந்தாபாத் என மூன்று முறை கோஷமிட்டார்.