புதுடெல்லி: ராணுவத்தில் குறுகிய காலப் பணியில் (14 ஆண்டுகள்) இருக்கும் பெண் அதிகாரிகள், நிரந்தரமாக பணியாற்றவும், உயர் பதவிகள் வழங்கவும் 3 மாதத்துக்குள் அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் நரவானே டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:வீரர்களை மதம், ஜாதி, பாலின அடிப்படையில் இந்திய ராணுவம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இந்திய ராணுவத்தின் மனநிலை இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. அதனால்தான், நாங்கள் கடந்த 1993ம் ஆண்டே பெண் அதிகாரிகளை ராணுவத்தில் சேர்த்தோம். பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ராணுவம் எடுத்துள்ளது.
பெண்களுக்கு நிரந்தர பணி, உயர் பதவி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ராணுவ தளபதி வரவேற்பு
- இராணுவ
- தளபதி பெண்களுக்கு நிரந்தர சேவையைப் பெறுகிறார், நிரந்தர வேலைக்காக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது
- தளபதி
- உச்ச நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது