2 மகள்களை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சங்கீதப்பட்டியை சேர்ந்த தொழிலாளி பெருமாள்(50). இவருக்கு 15 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி இறந்து விட்டனர். இவர் 2 மகள்களையும் பாலியல் பலாத்கார்  செய்துள்ளார். தகவலறிந்து சிறுமிகளை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் புகாரின்படி சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசார், பெருமாளை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை  நீதிபதி முருகானந்தம் விசாரித்து பெருமாளுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: