திருமலை: தெலங்கானாவில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விவசாயி ஒருவர் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார். இதற்கிடையே இந்தியா வரும் அவரை சந்திக்க வாய்ப்பு கேட்டு விவசாயி வலியுறுத்தியுள்ளார்.தெலங்கானாவின், கோனே கிராமத்தை சேர்ந்தவர் புசா கிருஷ்ணா(40), விவசாயி. இவர் தனது வீட்டு வளாகத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு அவரது நடவடிக்கையால் கவரப்பட்ட கிருஷ்ணா, டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைத்தார். அன்று முதல் தினமும் வழிபட்டு வருகிறார்.
டிரம்ப்பை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் ஆசை. இந்நிலையில் வருகிற 24ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள டிரம்ப்பை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், புசா கிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.