இட்டாநகர்: ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது போல் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள சட்டப்பிரிவு 371-ஐ ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை,’ என அமித்ஷா உறுதியளித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் அமலில் இருந்த சட்டப்பிரிவு 370, கடந்த ஆண்டு மத்திய அரசால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதேபோல், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பு சட்டப்பிரிவு 371 அமலில் உள்ளது. அந்த மாநிலங்களை சேர்ந்த மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்ட இந்த சட்டம் ரத்து செய்யப்படும் என பரவி வரும் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார். இது தொடர்பாக இட்டாநகரில் நேற்று நடைபெற்ற அருணாசல பிரதேச மாநிலம் உருவான 34வது தினவிழா பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பிரதமராக மோடி பொறுப்பேற்ற கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் பிறபகுதியுடன் புவியியல் அடிப்படையில் மட்டுமே இணைந்திருந்தன.