புதுடெல்லி: ராஜஸ்தானில் 2 தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் பகுதியில் உள்ள மெக்கானிக் கடைக்கு கடந்த 16ம் தேதி இரு தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் வந்துள்ளனர். அப்போது, கடையில் இருந்த பணம் காணாமல் போனதாக கூறி இருவரையும் 7 பேர் சேர்ந்து கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி, காண்போரை அதிர்ச்சி அடையச் செய்தது.இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், ‘ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் பகுதியில் 2 தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் தாக்கப்பட்டச் சம்பவம் கொடூரமானது. இந்த கொடூர சம்பவத்தை செய்தவர்களை நீதியின் முன் நிறுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,’ என்று கூறியுள்ளார்.