பாலியா: உபி.யின் பைரியா தொகுதி பாஜ எம்எல்ஏ சுரேந்திர சிங். இவரது மகன் ஹசாரி சிங். இவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து, அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரி ரதேஷ்யாம் ராமை அவதூறாக பேசியதுடன், அவரை இழுத்து கீழே தள்ளி தாக்கியும் உள்ளனர். இது தொடர்பாக ரதேஷ்யாம் ராம் அளித்த புகாரின் பேரில், ஹசாரி சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.