சென்னை: கீழடியில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடி செலவில் நவீன அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நிதி ஒதுக்கீடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அசோக் டோங்க்ரே அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுகளின் மூலம் கண்ெடடுக்கபட்ட தொல் பொருட்களை வருங்கால சந்ததியினர்கள், மாணவ, மாணவியர்கள், அறிஞர்கள் தொல்லியல் வல்லுனர்கள் மற்றும் அயல் நாட்டு அறிஞர்கள் அறியும் வகையில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ஒரு அகழ்வைப்பகம் அமைப்பது இன்றையமையாகிறது. இப்பணியானது பொதுப்பணித்துறையின் புராதன கட்டிடங்கள் பாதுகாப்பு பிரிவு மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அகழ்வைப்பகம் திருப்புவனம் அருகே கொந்தகை கிராமத்தில் 0.810 ஏர்ஸ் நிலத்தில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கொந்தகையில் அமைத்திட 2019-20ம் நிதியாண்டில் ரூ.30 லட்சமும், 2020-21ம் நிதியாண்டில் ரூ.11.91 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.