×

மாநில கராத்தே போட்டி: மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவர்கள் வெற்றி

உடன்குடி: மாநில அளவிலான கராத்தே போட்டியில் மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். சாயர்புரம் புனித மேரிஸ் தொடக்கப்பள்ளியில் வைத்து நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மெஞ்ஞானபுரம் எஸ்தர் சாந்தம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அஜித், ரஞ்சித் ஆகியோர் கட்டா பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த மாஸ்டர் டென்னிசனையும் மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருபா, வியாபாரிகள் சங்க தலைவர் பிரபு, பள்ளித்தலைமைஆசிரியர் ஜெஸி, தாளாளர் பாஸ்டர் நெல்லைகுமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags : State Karate Competition ,Manganapuram School Students ,School Students ,Manganapuram , State Karate Competition, Menganapuram School Students, Win
× RELATED மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச்...