சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, ஊசிமல்லி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி, சம்பங்கி, காக்கட்டான், கனகாம்பரம், ரோஜா உள்பட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, பனமரத்துப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, குரால்நத்தம், சாமகுட்டப்பட்டி, தும்பல்பட்டி ஆகிய பகுதிகளில் பட்டு ரோஸ், பன்னீர் ரோஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் பறிக்கப்படும் பூக்கள் சேலம் வஉசி பூ மார்க்கெட், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.