பெர்லின் : ஜெர்மனியின் ஹனாவ் நகரில் 2 மதுபார்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். பிராங்க்பேர்ட் நகருக்கு அருகே அமைந்துள்ள மக்கள் நெருக்கும் மிகுந்த ஹனாவ் நகரில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் இருந்த மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து அந்த கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.