×

ஓமலூர் அருகே எட்டாம் வகுப்பு 12 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த தாய் கைது

ஓமலூர்: ஓமலூர் அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியைக் கட்டாயத் திருமணம் செய்த நபர் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது மனைவி ரத்தினம், இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் ரத்தினம், தனது அண்ணன் மகனான செந்தில்குமார்(35) என்பவருக்கு மகளைக் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தந்தை பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்டு தந்தை பால்ராஜிடம் ஒப்படைத்தனர். மேலும், 12 வயது சிறுமியை திருமணம் செய்த செந்தில்குமார், சிறுமியின் தாய் ரத்தினம், மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் போலீசார் செய்து தேடிவந்தனர். 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான செந்தில்குமார் மற்றும் சிறுமியின் தாய் ரத்தினத்தை வழக்கு விசாரணையில் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Omalur Mother , Omalur, 12 year old girl, forced marriage, mother, arrested
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை