பூந்தமல்லி அருகே இந்தியன்-2 படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணியின் போது நேர்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

சென்னை: பூந்தமல்லி அருகே இந்தியன்-2 படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணியின் போது நேர்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம்சிட்டியில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணன், உதவியாளர் சந்திரன் (கலை), மது (தயாரிப்பு) உயிரிழந்தனர். இந்தியன் 2 படப்பிடிப்பு தலத்தில் 3 பேர் இறந்ததையொட்டி நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பு நிறுவனமான லைகா இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Stories: