சென்னை: குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் 6 நாள் காவலில் இடைத்தரகர் ஜெயகுமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனிடம் விசாரணை நடத்த பெருநகர குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து மோசடி நடந்த தேர்வு மையங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் உட்பட 22 நபர்களும், குரூப்4 தேர்வில் மோசடியாக தேர்வு எழுதிய 20 நபர்களும், விஏஓ தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்று கிராம நிர்வாக அலுவலர்கள் 4 பேர் என மொத்தம் இந்த மூன்று வழக்குகளிலும் 47 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று வழக்குகளும் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் குரூப் 2ஏ தேர்வில் நடந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளர்க் ஓம்காந்தனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் 7 நாள் காவல் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
குரூப் 2 தேர்வு முறைகேடு விவகாரம் ஜெயகுமார், ஓம்காந்தனிடம் மீண்டும் 6 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி: மோசடி நடந்த தேர்வு மையத்துக்கு அழைத்து செல்ல சிபிசிஐடி முடிவு
- ஜெயக்குமார்
- தேர்வு மையம்
- CBCID
- Omkandan
- குழு 2 தேர்வு துஷ்பிரயோகம் வெளியீடு ஜெயக்குமார்
- விசாரணை
- மோசடி மையம்
- நீதிமன்றம்