சென்னை: ராயப்பேட்டையில் நடக்கும் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: விடா முயற்சியோடு போராடி வரும் இஸ்லாமியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். இந்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறிய முதல் முதலமைச்சர் பினராயி விஜயன் மட்டும்தான்.