சென்னை: குடியுரிமை சட்டம் இந்திய மக்களின் குடியை கெடுக்கும் என்றும் பாஜக போன்று அதிமுகவுக்கு தமிழகத்தில் வரலாறு இல்லாத நிலையை மக்கள் உருவாக்குவார்கள் என்றும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி எதிர்ப்பு பேரணியில் தலைவர்கள் பேசினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், என்பிஆர் மற்றும் என்சிஆர் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் 25க்கு மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தலைவர்கள் பேசியது பின்வருமாறு : வி.பி.துரைசாமி (திமுக துணை பொதுச் செயலார்): சிஏஏ, என்பிஆர், என்சிஆர் ஆகியவற்றுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துகளை பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்கி உள்ளோம். திமுக எப்போதும் உங்களுடன் இருக்கும். பிரின்ஸ் (காங்கிரஸ் எம்எல்ஏ) : இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். நாட்டில் ஆழ்ந்த இருள் நிலவுகிறது. நாட்டில் இருந்து இருளை விரட்ட வேண்டும். அதை விரட்ட இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும்கனகராஜ்(சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்): அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் மக்களின் கோரிக்கைகளை ஏற்று நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டம் அதிமுகவுக்கு வரலாறு இல்லாத நிலையை மக்கள் உருவாக்குவார்கள்: எதிர் கட்சி தலைவர்கள் பேச்சு
- நிலை
- எதிர்க்கட்சித் தலைவர்கள்
- அஇஅதிமுக
- எதிர்க்கட்சித் தலைவர்கள்
- குடியுரிமை திருத்தச் சட்டம் மக்கள் AIADMK ஐ வரலாறு இல்லை