கருங்கல்: குமரி மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஊழியருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் சவுதி அரேபியா முகவரி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் புதுக்கடை அருகே மங்காடு பகுதியை சேர்ந்தவர் நேசையன். மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பால்தங்கம். இவர் கடந்த நவம்பர் 3ம் தேதி சின்னத்துறை அருகே கடலில் மூழ்கி இறந்தார்.
நேசையன் குடும்பம் ஏழ்மையில் வாடி வருவதால், பால்தங்கம் இறந்ததையொட்டி தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக ஸ்மார்ட் ேரஷன்கார்டு, ஆதார் அட்டை உட்பட ஆவணங்களை ராஜேஷ்குமார் எம்எல்ஏவிடம் அளித்திருந்தார்.