390வது பிறந்த நாள் சத்ரபதி சிவாஜிக்கு பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி: சத்ரபதி சிவாஜியின் 390வது பிறந்தநாளை முன்னிட்டு,  பிரதமர் மோடி டிவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் பெருமைமிக்க பேரரசர் சத்ரபதி சிவாஜியின் 390வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி  அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘இந்திய தாயின் மிகச்சிறந்த மகன்களில் ஒருவரும், தைரியம், இரக்கம், நல்லாட்சிக்கு வித்தாக திகழந்தவருமான சத்ரபதி சிவாஜிக்கு தலை வணங்குகிறேன். சிவாஜியின் வாழ்க்கை தொடர்ந்து பல லட்சம் பேருக்கு ஊக்கமளித்து வருகிறது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: