லண்டன்; இங்கிலாந்தில் புள்ளிகள் அடிப்படையிலான விசா திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. திறமையற்ற பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள இங்கிலாந்து விசா நடைமுறையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புள்ளிகள் அடிப்படையிலான விசா திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அந்நாட்டு உள்துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான பிரீத்தி படேல் இந்த திட்டத்தை தொடங்கி ைவத்தார். இத்திட்டம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. இதன்படி ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்த யூனியனில் இல்லாத இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சமவாய்ப்பு வழங்குவதாக இந்த விசா திட்டம் இருக்கும்.
திறமை, கல்வித்தகுதி, தொழில் துறையில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபருக்கு விசா வழங்கப்படும். ஆங்கில பேச்சுத்திறமை மற்றும் தொழில்திறமை போன்ற தகுதி கொண்டவர்களுக்கு 50 புள்ளிகள் வழங்கப்படும்.