டெல்லி: நூற்றாண்டு காலம் நடந்து வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்த உச்ச நீதிமன்றம், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த அறக்கட்டளை வசம் 2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும். அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.
ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்
- ராம ஜென்மா பூமி அறக்கட்டளை முதல் கூட்டம் முடிந்தது: நிர்தியா கோபால் தாஸ்
- சம்பத் ராய் நியமிக்கப்பட்டார்
- ராம ஜென்மா பூமி அறக்கட்டளை முதல் கூட்டம் முடிந்தது: நிரத்யா கோபால் தாஸ்