ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பெரிய அளவிலான வாழைத்தார்க்கு ஏற்பட்ட மவுசு அதிகரிப்பால் ரூ.1200க்கு ஏலம் போனது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தாமிரபரணி பாசனத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் மற்றும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த பத்மநாபமங்கலத்தை சேர்ந்த காசி என்ற விவசாயி தனது வீட்டுத் தோட்டத்தில் வாழை சாகுபடி மேற்கொண்டார். இவற்றுக்கு இயற்கையாகக் கிடைக்கும் மாட்டுச் சாணம் உள்ளிட்டவற்றை உரங்களாகப் பயன்படுத்தினார்.